ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆசாரக்கோவையும் அறிவியலும்

முனைவர். பெ.இராஜலட்சுமி, உதவிப்போராசிரியர், தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில். 27 Jul 2021 Read Full PDF

முனைவர். பெ.இராஜலட்சுமி,

உதவிப்போராசிரியர், தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்.

ஆய்வுச்சுருக்கம்

    இந்த ஆய்வுக் கட்டுரையானது ஆசாரக்கோவையில் இடம்பெற்றுள் அறிவியல் செய்திகளை வெளிக்கொணரும் நோக்கில் அமைந்தவை ஆகும். பழங்குடியின மற்றும் மூத்தகுடி மக்களின் வாழ்வியல் முறைகளிலும் மற்றும் தமிழ்சார் சான்றோர்களின் படைப்புத்திறத்திலும் அறிவியல் செய்தி மேலோகி நிற்பது நாம் அறிந்த ஒன்றே. மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான காலை எழுந்து நீராடி உணவு உட்கொண்டு பின் இரவு துயிலச்செல்லல் மற்றும் இதற்கு இடைப்பட்ட முடித்திருத்தம் மற்றோரின் காலணி அணியாமை மற்றும் குடும்ப வாழ்வை மேன்மையடையச்செய்யும் குழந்தைப்பேறு போன்ற ஒவ்வொரு நிகழ்விலும் நாம் செய்ய வேண்டிய செயல்பாடுகளைக் கூறிச்செல்லும் ஆசாரக்கோவைச் செய்திகளை இன்றை விஞ்ஞான அறிவியலின் அடிப்படையில் காரணத்தை எடுத்தியம்பப்பட்டுள்ளது. பகலில் காபீர் என்னும் வாயு வாசம் செய்வதால், புணர்ச்சியின் போது ஆண்மையை இழக்க நேரிடும் அதே வேளையில் இரவில் பிராணன் உடலை இயக்குவதால் உறவு கொள்ளலாம,;  தலைமுடியில் டெர்மட்டோபைட்டிக் புஞ்சை டிரைகோபைட்டம் சூப்ரம் ஆகிய கிருமிகள் உள்ளன ஆகையால் முடித்திருத்தம் செய்த பின் நீராட வில்லை எனில் மேற்கூறி கிருமிகளால் பாதிப்பு ஏற்படும். வாந்தி எடுத்த பின்  STEAM SHOWER செய்வதால் ஏற்படும் நன்மை, தலையில் பூசி எண்ணெய்யை சருமத்தில் பூசுவதால் செபொர்கெக்டெர்மடிடிஸ் என்ற தோல் தொற்றுக்கு ஆளாகுதல், பாதணிகளைப் பகிர்வதன் மூலம் Trichophyton என்ற பூஞ்சை தாக்குதல் போன்ற அறிவியல் சார் மருத்தவ செய்திகள் பற்றி இக்கட்டுரையில் எடுத்தியம்பப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்;

ஆசாரக்கோவை,நன்னெறிகள், ஒழுக்கம், கொள்கைகள்,பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்.

முன்னுரை

பண்டைய தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை நாம் அறிந்துகொள்ளச் சான்றுகளாக இருப்பவை இலக்கியங்களே. இவை தமிழரது அறிவியல் அறிவாற்றலையும், சமுதாய நெறிகளையும் ஓங்கி வளர்ந்த இனியதொரு நாகரிகத்தையும் குறிப்பனவாக உள்ளன. தமிழர்தம் பண்புநலன்களையும், சமூக வரலாற்றையும் காட்டும் காலப்பெட்டகங்கள் இலக்கியங்கள், அதுமட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், வானவியல் போன்ற துறைகளில் நம் முன்னோரது ஆளுமையையும் இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தொல்பொருள் ஆய்வுகள் பண்டைய நாகரிகங்கள் பலவற்றைப் பற்றியும் உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. இத்துடன் நமது முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயல்பாட்டிலும் உடல் நலத்திற்குரிய நலன் கலந்திருப்பதே நாம் இன்றைய அறிவியலின் உதவியின் வாயிலாக உணர்வதற்கு வாய்ப்பாக அமைகிறது எனலாம். அத்தகைய அறிவியலின் தாக்கம் ஆசாரக்கோவையில் அமைந்து வரும் பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைய உள்ளது.

அறிவியல் சார் இலக்கியம்

அறிவியலும் அறத்தின் வழியேப் பயணித்து இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்தி காட்டுகின்றது எனலாம். பன்னெடுங்காலந்தொட்டே முன்னோர் பெருமக்கள் அறிவியலின் சிறப்பைத் தன் செயல்பாட்டில் நிலைநிறுத்தி வாழ்ந்து வந்தனர். காலமும் மனிதச் செயல்பாடுகளும் வளர, வளர முன்னோர் வாழ்வில் கருவுற்றிருந்த அறிவியல் குழந்தை வடிவம் பெற்று தற்பொழுது இவ்வுலகில் வெற்றிநடைப் போடுகிறது எனலாம். அந்த அளவிற்கு அறவியலின் தேவையும், நுணுக்கமும் மக்கள் வாழ்வில் இரண்டறக்கலந்து நிற்கின்றன என்பர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவியல் குறித்து ட்சன் என்பவர் “இலக்கிய ஆராய்ச்சி ஒரு சுவையூட்டும் கலை என்று புகழ்பாடுகின்றார். இலக்கியமும் அறிவியலும் உலகின் இரு கண்ணாடிகளாகும். உலகம் ஏன் வாழ்கிறதா? என்பது அறிவியலாகும். இவ்வாறு இலக்கியமும் அறிவியலும் இணைந்து உலகத்தையே ஆழ்கின்றன எனலாம்”1 என்கிறார். இதன்வழி இலக்கியமும் அறிவியலும் இன்றி மனிதச் செயல்கள் முடக்கம்பெறும் என்ற கருத்துப் பெறப்படுகிறது.

அறிவியல் என்பதற்குச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தருகின்ற விளக்கம்    “அறிவாராய்ச்சியால் கூர்ந்து நோக்கியும் ஆய்வு செய்வதும் மெய்ம்மை கண்டும் ஒழுங்குபடுத்தப்பட்ட பொது நெறியீட்டறிவு”2 என்று விளக்கம் தருகிறது. மேலும், கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி “ஆங்கிலத்தில் உள்ள ளுஉநைnஉந என்னும் சொல் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது என்பர். உலகில் இருப்பவற்றை இயற்கை நியதிகளை சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட பொருளை முறையாக வரையறை செய்வதும் அறிவியல்”3 என்று அறவியலின் நிலை மற்றும் செயல் குறித்தும் விளக்கம் தருகிறது.

உணவு உண்ணும் முறை

மனிதன் உயிர் வாழ்வதற்;கு ஆதாரமே உணவு எனலாம். அத்தகைய உணவு உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறதா? இல்லை கேடுவிளைக்கிறதா? என்ற பாங்கில் நாம் ஒவ்வொரு வரும் உண்ணும் முறையில் மாற்றம் வரும். ஆனால் பெருவாயின் முள்ளியாரோ, உணவில் வரன்முறைக்கூறாது உணவு உண்ணும் முறையில் சில அமைப்புமுறையினைக் கூறியுள்ளார். அதாவது, நாம் உணவு உண்பதற்கு முன் நீராடிக் கை, கால் சுத்தம் செய்த பின்னரே உண்ணல் நலமாகும். சாப்பிட்ட பிறகு நீராடினால் உடல் பருமனாகி அதிகரிக்கும். எனவேதான் சரியான முறையில் உண்பதே சாலச்சிறந்தது என்பார். இத்தகு உண்ணும் முறை

“நீராடி கால்கழுவி வாய்புசி மண்டலம் செய்து

உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்

உண்டார்போல் வாய்புசிச் செல்வர் அதுவெறுத்துக்

கொண்டார் அரக்கர் குறித்து” (ஆசாரம் - பா.18)

என்றபாடல் வலியுறுத்துகின்றது. இதில் உண்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. சாப்பிட்ட உணவை ஜீரணிக்க செய்ய உடலில் நொதிகள் தேவைப்படுகின்றன. இந்த நொதிகள் உடல் வெப்பமாக இருந்தால்தான் சுரக்கும். சாப்பிட்டதும் குளிக்கும் போது குளிர்ச்சியால் இந்த நொதிகள் சுரக்காது அதனால் சாப்பிட்டு குளிப்பது அஜீரணத்தை உண்டாக்கும். ஒருவர் உணவை உட்கொள்ளும்முன்பு தனது கைகால்களை சுத்தம் செய்வது வழக்கம், அவ்வாறு சுத்தம் செய்தபின் அந்த ஈரப்பதம் உலர்வதற்கு முன்பே உணவினை உட்கொண்டு முடிக்க வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் போது நமது உடலில் சாதாரண நிலையில் இருக்கும் வெப்பநிலை வேறுபடும். இம்மாற்றத்தை நம் உடல் ஏற்றுக்கொள்ளும் முறையினையும் நீரானது உலர்வதற்கு முன்பே உணவினை உட்கொள்ளும் பொழுது வெப்பநிலையானது சமன் செய்யப்படுகிறது. 

மேலும் உணவை உண்ணுகின்றபோது கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்துகொண்டும், பேசாமல், சிரிக்காமல், வேடிக்கைப்பார்க்காமல் அமைதியாய் உண்ண வேண்டும். இப்படி உண்ணாவிட்டால் உடலில் செரிநீர் சரிவரச் சுரக்காமல் அஜீரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அறிவியல் குறிப்பின் மூலம் காணலாம். உண்ணும்போது படுத்துக்கொண்டு உண்ணுதல் கூடாது. நாம் படுத்திருக்கும் பொழுது, மூச்சுக்குழலும், உணவுக்குழலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். எனவே உணவுக் குழலினுள் சென்ற உணவானது தவறி மூச்சுக் குழலுக்குள் செல்லும் வாய்ப்புள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். 

மேலும் உண்ணும்போது முதலில் இனிப்பு இடையில்பிறசுவை இறுதியில் கசப்பு என்னும் வகையில் உண்ண வேண்டும் என்ற பகுப்பு முறையில் கூறப்பட்டுள்ளது.

“கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப

மெச்சும் வகையால் ஒழிந்த இடைஆக

துய்க்க, முறைவகையால், ஊண”; (ஆசாரம் - பா.25)

இனிப்புச் சுவை, சுவை அறும்புகளையும் மற்றும் உமிழ்நீரையும் விரைவாக செயல்பட செய்கிறது. இனிப்பு பொருளை சாப்பிடுவதனால் முதலில் செரிமான சுரப்புகளின் ஓட்டத்தை செயல்படுத்துகிறது. பசியுள்ள ஒரு மனிதருக்கு இனிப்புச்சுவை முதலில் வழங்குவதால் அது வயிற்றில் உள்ள வாயுவை வெல்ல உதவுகிறது. ஆதன்பின் வழங்கப்படும் புளிப்பு மற்றும் உப்பு சுவை சிறுகுடலில் உள்ள செரிமான நெருப்பைத் தூண்ட உதவுகிறது. கடுமையான கசப்பான உணவு  உண்டபின் சுறுசுறுப்பைத்தரக்கூடியது. ஆகையால் தான் உணவு உண்பதில் முதலில் இனிப்பு இடைப்பட்டதில் பிற சுவை இறுதியில் கசப்புத்தன்மையான உணவைக்கூறி உடல் ஆரோக்கியத்தின் தன்மையை நிலைநாட்டியுள்ளனர் எனலாம்.

மகப்பேற்றின் மகத்துவம்

உயிர் உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அது அணு நிறைந்த உடலில் செல்கள் உருவாகி உயிரோடு விந்தணுக்கள் சீராக செயல்படுகின்றன. விந்துக்கள் கரு உருவாகக் காரணமாகிறது. பெண்ணின் சிறப்பம்சமான கருத்தன்மைக்கும் பூப்பு மிகவும் இன்றியமையாதாகிறது. “ஓவ்வொரு முறைப் பூப்பெய்தும் போதும் சினைமுட்டை வெடித்து ஆணின் உயிரணுவை எதிர்ப்பார்க்கும.; அதற்கு இரண்டு தினங்கள் எனில் சிதைந்து திசுக்களோடு நீர்த்த குருதியும் கலந்து வெளியேறும். இதுவே திங்கள் தோறும் நடைபெறும் பூப்பாகும் என்ற கருத்து குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று நாள் நடைபெறும் இரத்தப்போக்கில் சில திரவங்கள் வெளியேறுகின்றன. அவற்றில் ஒருவகை வழும்பு என்ற திரவம் ஆணின் உயிரணுவை எதிர்த்து அதனைச் செயலாற்றதாக்கி விடுகிறது எனவே கருவுறுவாகுதல் தடைபடும்.”4 என்பர்.

  அழும்பு என்னும் வழும்பானது பூப்பின் இரத்தப்போக்குடன் சென்று விடுவதால் நான்காம்நாள் முதல் பன்னிரண்டாம் நாள் வரை இத்தொந்தரவு இருக்காது. இதுவே கரு வயிற்றில் தோன்றும் காலமாகும். இதனை உணர்ந்து தான் சங்க காலத்தில் பூப்பு நிகழ்ந்த மூன்று நாட்கள் கணவன் மனைவி இணையக்கூடாது என்பதனை அன்றே பதிவு செய்துள்ளனர். பூப்புற்ற முதல் நாள் இருபாலரும் புணர்ச்சி மேற்கொண்டால் கரு உருவாகாது என்றும் இரண்டாம் நாள் புணரின் போது கரு வயிற்றிலே அழியும் என்றும் மூன்றாம் நாள் புணரின் போது குறைந்த ஆயுளுடன் குழந்தை பிறக்கும். இத்தகு மருத்துவ ரீதியான உண்மையை அன்றே தமிழ் இலக்கியங்களில் எடுத்தியம்பியுள்ளனர். இதனையேதான் முதல் மூன்று நாட்கள் புணர்ச்சிக்கு ஆகாது என்பதனை தொல்காப்பியர் களவியலில் காட்டுவர். இதனை, 

“முந்நாள் அல்லது துணையினின்று கழியாது

ஆந்நாளகத்தும் அதுவரை வின்றேல்”

என்ற நூற்பா பெண்டிர் மருத்துவப்பூப்பின் தன்மையைத் தெளிவுறுத்துகிறது. இதே கருத்தினை,

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீர் ஆடியபின்

ஈர் ஆறு நாளும் இகவற்க என்பதே-

பேர்அறி வாளர் துணிவு (ஆசாரம் - 42 பாடல்)

என்றபாடல் விளக்குகின்றது. இதன்வழி மாதப்பூப்பு நிகழ்ந்த மூன்றுநாள் கணவன் மனைவி சேரக்கூடாது என்ற உண்மையை அறிய முடிகின்றது. மேற்கூறிய கருத்தினை வலுப்படுத்தும் பொருட்டு, நவீன மருந்துவக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அகத்தியர் தனது நூலில்,

“ஆண்மையென்று மங்கையர்கள்

பூக்குங் காலம்

அன்று முதல் பதினான்கு நாலும்

தாண்மையன்றி தினமொன்று

இதழ்தானொன்று

கருவான கருக்குழிதான் இந்நாட்டுள்ளே” 

என்று வரிகள் மூலம், பெண் மாதவிலக்கான நாளில் இருந்து நான்காவது நாளில் சினை முட்டை தோன்றி அந்நாளில் உறவு கொள்ளும் போது குழந்தைப்பேறு உண்டாகும் என்பதை விளக்கியுள்ளார்.

புணர்ச்சியிலும் புனிதம்

தலைவன,; தலைவி மனதொத்து இணையும் இல்லறவாழ்விலும் நம் முன்னோர்கள் சில நடைமுறைக் கோட்பாட்டை வைத்துள்ளனர். பெண் மாதவிலக்கான நாளில் இருந்து நான்காவது நாள் முதல் சினை முட்டை தோன்றி அந்நாட்களில் இருந்து உறவு கொள்ளும் போது குழந்தைப்பேறு உண்டாகும் என்று கூறியிருந்தாலும் சாத்திர முறைப்படி சில தினங்களில் உறவு கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். 

பெருவாயின் பெருவாயின் முள்ளியார் நண்பகல், நள்ளிரவு, மாலை, காலை, சிவபெருமான், திருமாலுக்குரிய நாடகளாகிய திருவாதிரை, பௌர்ணமி, அட்டமி, தன்னுடைய பிறந்தநாள் போன்ற நாட்களிலும் கணவன், மனைவி இணைதல் கூடாது என்கிறார். ஓவ்வொரு நிகழ்விலும் ஒரு வரையறைகள் வைத்ததன் நோக்கம் அதன் செயல்முறையிலும் சில அறிவியல் அணுகுமுறைகளோடு சாத்திரமுறை செய்திகளும் பகிரப்பட்டுள்ளமையைக் காணலாகிறது. பகலில் உடலுறவு கொள்ளக்கூடாது என்று கூறுவதற்குக் காரணம் நமது உடலில் பகலில் காபீர் என்னும் வாயு வாசம் செய்வதால், புணர்ச்சியின் போது ஆண்மையை இழக்க நேரிடும் அதே வேளையில் இரவில் பிராணன் உடலை இயக்குவதால் உறவு கொள்ளலாம,; அது உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும் இக்காரணம் கருதியே பகலில் புணர்ச்சி தவிர்க்கப்பட வேண்டும் என்றுரைத்துள்ளார்.

          துலா காவேரி மகாத்மியத்தின் கதையில், அகஸ்திய முனிவர் ஹரிச்சந்திராவிடம் சந்திரகாந்தாவிற்கும் வித்யவள்ளிக்கும் இடையில் நடந்த ஒரு விவாதம் பற்றி கூறுகிறார். அதில் சந்திரகாந்தா கூறுவதாவது, ஒரு மனைவியின் மாதவிடாய்ச் சுழற்சியின் 5ஆம் நாளிலிருந்து 16 நாட்கள் வரை கணவனுடன் இணைய அனுமதிக்கப்படுகின்றன. அந்த 16 நாட்களிலும் கூட, பின்வரும்  தசமங்களின் போது (சந்திரனின் வளர்பிறை மற்றும் குறைந்து வரும் கட்டங்களின் அடிப்படையில் ) ஒரு ஜோடி உடலுறவைத் தவிர்க்க வேண்டும். இவை ச~;டி (6 வரு நாள்), அ~;டமி (8 வது நாள்), ஏகாதேசி (11 வது நாள்), த்வாதா~p  (12 வது நாள்), சதுர்த்தசி (14வது நாள்), அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் இவை தவிர ஒரே நட்சத்திர நாட்கள், ~;ரவன் நட்சத்திர நாள், வ்ரத் நாட்கள், பகல் நேரம் மற்றும் சந்தியா  நேரங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. 

           இந்த நாட்களில் இனச்சேர்க்கைக்குப் பிறகு ஒரு குழந்தையை கருத்தரித்தால், அந்த பிறந்த குழந்தை குறுகிய காலம் அல்லது கொடூரமான எண்ணம் அல்லது நோயுற்றதாக இருக்கும். அதேசமயம் சாஸ்திரங்களால் ஏற்றுக்ககொள்ளப்பட்ட காலத்தில் கருத்தரிக்கப்பட்டால், அந்த குழந்தை நல்லொழுக்கமுள்ளவனாகவும், கற்றவனாகவும், நீண்டகாலம் வாழ்வதாகவும் இருக்கும் என்பதிலிருந்து அறிவியல் அணுகுமுறையோடு சாஸ்திரமுறைகளையும் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதைக்காணலாகிறது.  

நீராடுதலின் மகத்துவம்

நீராடல் என்பது மனிதனின் உடலுடன் மட்டுமல்லாது உள்ளத்துடனும் தொடர்புடைய ஒன்று. நாம் சோர்ந்திருக்கும் வேளையில் நம்மைச் சுறு சுறுப்பாக்கி பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை பன்மடங்கு வேகப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு நீராடுதல் எனலாம். நமது சான்றோர்கள் நீராடுதலிலும் ஒரு உன்னத செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இறைவனை வழிபடுவதற்கு முன், தீக்கனாவைக்கண்ட காலத்தும், உண்டதை வாந்தி எடுத்தபோதும், மயிர்களைந்த போதும், புணர்ச்சி மேற்n;காண்ட காலத்தும், ஜயம்கொள்ளாது நீராடல் வேண்டும். (ஆசாரம் - பா.10) 

நாம் இன்றளவிற்கும் முடிவெட்டி வீடு திரும்புவோரை நீராடாது வீட்டினுள் நுழைவதற்கு அனுமதியார் காரணம் வினவின் சரிசரிவர எடுத்துரைக்காத சூழல் எழும். “அறிவியல் மரபுப்படி தலைமுடியில் டெர்மட்டோபைட்டிக் புஞ்சை டிரைகோபைட்டம் சூப்ரம் ஆகிய கிருமிகள் உள்ளன. முடியானது மக்காத தன்மை உடையது, அது உடலினுள் சென்றால் பல்வேறு உபாதைகள் ஏற்படும். அத்துடன் சூடான மற்றும் வெதுவெதுப்பான நீர் தலைமுடியின் துளைகளைத் திறந்து மயிர்கால்களை ஓய்வெடுக்கத் தூண்டுகிறது. இதன்வழி கிருமிகள் அகற்றப்பட்டு தலைமுடி மீண்டும் நல்ல முறையில் வளர்வதற்கு உரிதுணை புரிகிறது எனலாம். இத்தகைய அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே மயிர்களைந்தபின் நீராடுதல்”5.என்று விளக்கம் தந்துள்ளனர்.

உண்ட உணவை வாந்தி எடுக்கும்பொழுது அவை சரிவர செரிமானமாகாத உணவு என்பதால் அதிலும் நல்ல விட்டமின்னுடன் உடலுக்கு ஊறு விளைவிக்கும் விட்டமின்னும் வெளியேறி உடல் உபாதையை ஏற்படுத்துவதால் வாந்தி எடுத்தபின்பு நீராடல் வேண்டும் என்ற செயல்முறையினை விதித்துள்ளனர் எனலாம். இதனை மருத்துவ முறையில் STEAM SHOWER என்பர். 

மேலும் நீராடும் இடத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறையினையும் எடுத்தியம்பியுள்ளனர். அதாவது. நல்ல நெறியில் ஒழுகுபவர் நீராடுங்காலத்துக் குளத்தில் நீந்தமாட்டார், அந்நீரில் எச்சிலை உமிழமாட்டார், நீரைக் குடைந்து திளைந்து ஆடார், நீரில் விளையாடார், எண்ணெய் இல்லாமல் தலைகாய்ந்திருந்தாலும் கழுத்துவரை நீராடமாட்டார் (ஆசாரம் - பா.14) என்பது போன்று வரையறை செய்துள்ளனர். ஆசாரக்கோவை நூல் எழுந்த 2ஆம் நூற்றாண்டு பிற்பகுதி அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் என்று உரையாசிரியர்களால் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மக்கள் குளிப்பதற்கும,; குடிப்பதற்கும் பயன்படுத்திய நீர் குளநீர். அதில் சில பேர் குளிப்பதற்கு கிணற்றையும் பயன்படுத்துவர். 

இதில் ஆசிரியர் குளத்தில் நீராடுபவர்களுக்காக பொதுநல சிந்தனையோட சில அறிவுரைகளையும் பாடலில் கூறியுள்ளமையைக் காணலாகிறது. குடிப்பதற்கு நீர் எடுக்கக்கூடிய அக்குளத்தில் மனிதர்கள் நீந்தினால் தெளிந்த நீர் மாசு அடையும். அந்நீரில் எச்சிலை உமிழும் போது தண்ணீரின் தூய்மைக்கெட்டு மாசுஅடையும். நீரில் குடைந்து வந்து குடிநீரையும் பாதிக்கும் என்ற உயரிய பொதுநல நோக்கில் கூறியுள்ள பாங்கைக்காணலாகிறது.

தூங்கும் முறை

மனிதன் உடலளவிலும,; மனதளவிலும் ஓய்வெடுக்கும் உன்னதமான நேரம் எனில் அவன் துயில்கொள்ளும் தருணமே எனலாம். அந்த தூங்கும் நேரத்திலும் மனமும,; உடலும் ஓய்வுடன் ஆரோக்கியமாகத் திகழும் வண்ணம் பெருவாயின் முள்ளியார் தூங்கும் முறை மற்றும் திசைக் குறித்தும் சிலத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் எனலாம். படுக்கும்போது இறைவனைக் கூப்பி வணங்கி, வடக்குத் திசையிலும் கோணத் திசைகளிலும் தலையை வைக்காது, போர்வை உடலில் போர்த்திப் படுக்கை சேர்தல் நல்;லவழியாகும் என்கிறார். இதனை,

“கிடக்குங்கால், கைகூப்பித் தெய்வம் தொழுது

வடக்கொடு கோணம் தலைவையார், மீக்கோள் 

உடல்கொடுத்துச் சேர்தல் வழி” (ஆசாரம் - பா.30) 

என்ற பாடலின் வழி அறியலாம். வடக்கேத் தலைவைத்துத் தூங்கும் பொழுது உடலின் காந்தப்புலம் பூமியின் காந்தப்புலத்தோடு குறுக்கிடுகிறது. இது இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி இதய பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்தும். மேலும் தலையை வடக்கு நோக்கி வைத்துத் தூங்குவதால் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். நீங்கள் வடக்குத் திசையை நோக்கி தூங்கினால், தூக்கமின்மை, தலைவலி, நெஞ்செரித்தல் போன்ற தொந்தரவுகள் வருவதற்குக் காரணமாக அமைகிறது. இந்த செய்தி அறிவியல் வளர்ந்த இந்த நூற்றாண்டு காலகட்டத்தில் கண்டறியப்பட்ட மருத்துவக்கண்டு பிடிப்புகளாகும். ஆனால் இன்று கூறிய இந்த மருத்துவ உண்மையைத்தான் அன்றே சங்க இலக்கிய சான்றோர்கள் தமிழ் இலக்கியத்தில்  தங்களின் அறிவயில் சார் செய்திகளைக் கூறியுள்ளனர் எனலாம்.

தூய்மையின் சிறப்பு

அறிவியல் சார் உண்மையோடு சில தூய்மையின் செயல்பாடுகளும் கூறியுள்ளமையைக் காணலாகிறது. தலையில் பூசிய எண்ணெயை வழித்து பிற உறுப்புகளில் பூசமாட்டார். மற்றவர்கள் உடுத்திய அழுக்கான ஆடையைத் தொடமாட்டார். மற்றவர்கள் தம்மை வேண்டிக் கொண்ட போதும் பிறரது செருப்பை அணியமாட்டார்;;;;;;;;;;;. (ஆசாரம் - பா.12) என்று வாழ்க்கையோடு தொடர்புடைய செயல்பாடுகளைக் கூறியுள்ளதைக்காணலாகிறது. பொதுவாக உச்சந்தலையில் உருவாகக்கூடிய செபம் என்பது சற்று அமிலத்தன்மை வாய்ந்த எண்ணெய் ஆகும். இது உச்சந்தலையில் மிக நெருக்கமான நமது இழைகளை உயிர்ஊட்டுகிறது மற்றும் இழந்த ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கிறது. 

முடியை சேதமilயாமல் பாதுகாக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும், முடியின் முனைகளுக்கு எண்ணெய் தடவ வேண்டும். ‘எண்ணெய்கள் இயற்கையாக நிகழும் ஈஸ்டிகளின் அதிகரிப்புக்குக் காரணமாகின்றன. அவை செபொர்கெக்டெர்மடிடிஸ் போன்ற நிகழ்விற்கு வழிவகுக்கும். நாம் தலைக்குப் பயன்படுத்திய எண்ணெயை உடம்பிற்குப் பயன்படுத்தும் போது அங்கிருக்கும் இரத்த செல்களையும் பல நுண்ணுயிர்களையும் இடமாற்றம் செய்கிறோம். இதனால், சருமத்தில் வாழும் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் மாற்றமடைகிறது. இதனால் வாழ்வாதாரத்திற்காக போட்டி நிலவுவதால் சருமம் பாதிப்பிற்கு உள்ளாகிறது”6என்பர். இது இன்றைய உடல்சார் அறிவியல் கண்டுபிடிப்புகளாகும். இதனை அறிந்த நம் சான்றோர் பெருமக்கள் தங்களது நூல்களில் எடுத்தியம்பியுள்ளமையைக் காணலாகிறது.

பாதணிகளைப் பகிர்வதன் மூலம் பூஞ்சை பரவுவதை எளிதாக்குகிறது. பகிரப்பட்ட காலணிகளால் கடுமையான பிரச்சனைகளும் மற்றும் நுண்ணுயிரான Trichophyton என்ற பூஞ்சை தொற்றுவதற்குக் காரணமாக அமைகின்றன. இன்றை கண்டுபிடிப்பினை மனதில் வைத்துதான் அன்றே இலக்கியங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன. 

முடிவுரை

மனித வாழ்வு சிறக்க நல்ல சிந்தனை, நல்ல செயல் இரண்டுமே தேவையாகின்றன. காலை எழுந்தது முதல் இரவு துயில் கொள்ளும் வரை ஒரு மனிதன் செய்யக்கூடிய அத்தனை செயல்முறைகளிலும் சான்றோர்கள் ஒரு வரன்முறையைக் கையாண்டுள்ளனர் எனலாம். ஆசாரக்கோவைத் தோன்றிய காலகட்டத்தில் சொன்ன மனித ஒழுக்க நிகழ்வுகள் அறிவியல் வளர்ச்சிப் பெற்ற இக்காலகட்டத்தில் ஆராய்ந்து பார்க்கின் அவை எண்ணிலடங்கா அறிவியல் பொக்கி ~ங்களைத் தன்னகத்தேக் கொண்டதைக் காணலாகிறது. ஆசாரக்கோவைக் கூறும் வாழ்வியல் அறங்கள் மற்றும் வாழ்க்கைக்குரிய நல்ல பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றினால் வீடு, தெரு, ஊர், நாடு என்று எல்லா நிலைகளிலும் சுத்தத்துடன் ஆரோக்கியமாகவும் நாம் வாழவழிவகுக்கும் என்பதை இக்கட்டுரையின் வாயிலாகக் காணலாகிறது.

அடிக்குறிப்புகள்

  • ட்சன், அறிவியலில் அறிவியல், ப.73.
  • ஞா.தேவநேயப்பாவாணர், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகர முதலி, ப.533
  • க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி, ப.58.
  • லோ.சற்குணம்,ஆய்வுக்கட்டுரையாளர், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள், ப.233
  • Cal State J Med, Western journal of medicine, Volume 16,Page 55.
  • Brightman .R, Science and Everyday life,Page 889
  • Humberdo R Maturana,, Sociology of the Sciences, Volume 14, Page 33.

துணைநூற்பட்டியல்

  • சுப்புரெட்டியார்.ந, தமிழில் அறிவியல் அன்றும் இன்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 1990.
  • ஞா.தேவநேயப்பாவாணர், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகர முதலி, சென்னைப்பல்கலைக்கழகம்.
  • க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி, சென்னைப்பல்கலைக்கழகம்.
  • Cal State J Med, Unscientific Sciences, Western journal of medicine, Volume 16,1918.
  • Brightman .R, Science and Everyday life, Nature Journal , Volume 134.
  • Humberdo R Maturana,, Sociology of the Sciences, Volume 14, Springer.