இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கருத்து மற்றும் சவால்கள் – ஓர் ஆய்வு
கட்டுரையாளர்: ர.நாகஜோதி, எம்.எட், என்.கே,தி, தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை- 5.
நெறியாளர்: முனைவர் திருமதி ந. கலை அரசி, இணைப் பேராசிரியர், கல்வித்துறை, என்.கே,தி, தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை- 5
Abstract
Educational institutions around the world have been shut down as the COVID-19 epidemic affects academic calendars. Most educational institutions have switched to online learning sites to pursue educational activities. However, questions about the readiness, design and performance of online education are not yet clearly understood, especially for a developing country like India where technical restrictions such as device fit and network bandwidth availability pose a serious challenge. This study focuses on understanding the ninth-grade students' perception of online education and the challenges of online learning through an google survey of 304 students. This will help in shaping the effective online learning environment. The results indicate that the vast majority (50%) of those surveyed were willing to choose online education classes to manage the curriculum during these epidemics. Most students prefer to use a smartphone for online education. The study examines government and government-aided students facing some challenges in online learning, while students commented that the use of online education initiatives is a challenge for students due to internet connectivity issues in rural areas.
ஆய்வுச்சுருக்கம்
கோவிட்-19 தொற்றுநோய் கல்வி நாட்காட்டிகளை பாதிக்கச் செய்வதால் உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கல்விச் செயல்பாடுகளைத் தொடர ஆன்லைன் கற்றல் தளங்களுக்கு மாறிவிட்டன. எவ்வாறாயினும், மின் கற்றலின் தயார்நிலை, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு, சாதனங்களின் பொருத்தம் மற்றும் அலைவரிசை கிடைப்பது போன்ற தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் கடுமையான சவாலாக உள்ளன. இந்த ஆய்வில், 304 மாணக்கார்களின் இணையவழி கணக்கெடுப்பின் மூலம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் இணைய வழி கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் இணையவழி கற்றல் மீதான சவால்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்படுகிறது . இது பயனுள்ள இணையவழி கற்றல் சூழலை வடிவமைக்க உதவியாக இருக்கும். இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட பெரும்பாலானோர் (50%) இந்த தொற்றுநோய்களின் போது பாடத்திட்டத்தை நிர்வகிக்க இணையவழி வகுப்புகளைத் தேர்வுசெய்யத் தயாராக இருப்பதாக முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் இணையவழி கற்றலுக்கு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்த விரும்புகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் இணைய வழி கல்வியில் சில சவால்களை எதிர்கொள்வதாக இந்த ஆய்வில் ஆராயப்படுகிறது .அதேசமயம் கிராமப்புறங்களில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு சிக்கல்கள் காரணமாக இணையவழி கற்றல் முயற்சிகளைப் பயன்படுத்துவது மாணவர்களுக்கு சவாலாக உள்ளது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
*திறவுச் சொற்கள் : கருத்து, உள்ளடக்க ஆய்வு,சவால்கள் ,இணையவழி கற்றல், கொரோனா தொற்றுநோய்
முன்னுரை
தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுநோய் முன்னோடியில்லாத சுகாதார நெருக்கடி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்துள்ளது.
உலக சுகாதாரம் மார்ச் 2020 முதல் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள கல்வி முறைகளின் பலவீனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தற்காலிகமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன . பள்ளிகள் மூடப்பட்ட பொழுதும் கற்றல் மட்டும் நிறுத்தப்படவில்லை.
மாணவர்கள் தாங்கள் முன்பு கற்றுக்கொண்டதை மறக்கச் செய்தார்கள், இதன் பின்னணியில், மாணவர்களின் உணர்வுகள் (நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டும்) இணையவழி வகுப்புகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கல்விச் செயல்பாடுகளைத் தொடர இணையவழி கற்றல் தளங்களுக்கு மாறிவிட்டன.
இது சம்பந்தமாக, இந்த ஆய்வு இணையவழிக் கல்வி கற்பது பற்றி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கருத்து மற்றும் சவால்களை ஆய்வு செய்ய முயற்சிக்கிறது.
ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்
பாரம்பரிய முறையில் வகுப்பறையில் கற்றலை பெறுவது மாணவர்களுக்கு எளிதாக இருந்தது.இணையவழி வழியில் கற்கும் போது மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக ஆராய்ச்சியாளர் அறிய முடிந்தது.
இணைய வழியில் கல்வி கற்பதால் சக தோழர்கள் இல்லை,விளையாட்டு மைதானம் இல்லை,அதை விட நேரடியாக ஆசிரியர்களின் கண்காணிப்பு இல்லை,சந்திப்பு இல்லை மேலும் ஆசிரியர்கள் உடன் உயிரோட்டமான கருத்து பரிமாற்றத்தில் சிக்கல்கள் போன்ற பல்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றன.வீட்டுக்குள் வகுப்பறைச் சூழலை ஏற்படுத்துவது மாணவர்கள் விரும்பவில்லை போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில் இணையவழிக் கல்வி ஆசிரியர்களுக்கான அனுபவங்கள் மிகவும் கவலையாக இருந்தது பின்பு பெரும்பாலானவர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளை தொடங்குவதுசுகமானதாக இருந்தது.
கற்றல் மென்பொருட்கள் மற்றும் கல்வி செயலிகள் கொண்டு தானே கற்றல் எனும் இணைய வகுப்பறைகள் அதிக அளவில் பாடத்திட்டத்தில் இடம் பெறத் தொடங்கியுள்ளது.இந்த காலகட்டத்தில் இணைய வழி கல்வி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது இன்றியமையாத ஒன்றாக கல்வி அமைப்பில் காணப்படுகிறது.எனவே இந்த வரிசையில் இணையவழிக் கல்வி தொடர்பான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கருத்து மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவ்வாறு கற்றலை மிகவும் பயனுள்ளதாகவும்,வெற்றிகரமாகவும் மாற்றக்கூடியது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற் கொள்வது சாலச் சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆய்வின் நோக்கம்
- ஒன்பதாம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.
- நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிதல்.
- தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு உள்ளதா என்பதை கண்டறிதல்.
- அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே இணைய வழி கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் வேறுபாட்டினை ஆய்தல்.
ஆய்வின் கருதுகோள்
- ஒன்பதாம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு இல்லை.
- நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு இல்லை.
- தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு இல்லை .
- அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே இணைய வழி கல்வி கற்பது பற்றிய கருத்து மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் வேறுபாடு இல்லை .
ஆய்வு மாதிரி:
இணையவழிக் கல்வி பற்றிய ஆய்வு பள்ளியில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவி, மாணவர்களின் கருத்து மற்றும் சவால்களை ஆராய்கிறது. இந்த ஆய்விற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் எளிய சீரற்ற மாதிரியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை மற்றும் மதுரையில் உள்ள பள்ளிகளில் இருந்து 304 மாணவர்களின் மாதிரிகள் பதிலளித்தனர் .
இணையவழிக் கல்வி குறித்த மாணவர்களின் கருத்து மற்றும் சவால்களை சேகரிக்க ஐந்து-புள்ளி லைக்கர்ட் அளவுகோல் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்மறை வினாக்களுக்கு 5- முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்,4-ஒப்புக்கொள்கிறேன், 3-நடுநிலை,2- முரண்படுகிறேன்,1- முழுமையாக முரண்படுகிறேன் என்று மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. எதிர்மறை வினாக்களுக்கு எதிர் மாறான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆய்வின் வகை சுற்று ஆய்வு முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக் கருவி:
ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் (Tools of study )
இந்த ஆய்விற்கான தரவுகளை சேகரிக்க வினா நிரல் முறையினை பயன்படுத்தப்பட்டுள்ளது . இது ஒரு தரப்படுத்தப்பட்ட கருவியாகும் (standardized tool ) ஆகும்.
இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ( questionnaire )
பின்வரும் ஆய்வாளர்கள் பயன்படுத்திய அளவீடுகள் மற்றும் வினா நிரல் முறையினை ஆராய்ச்சியாளர் ஆய்விற்கு ஏற்ப சிறு மாற்றங்கள் (Adappt) செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
முகமது அர்ஷத் கான் , துபா கமல் , அஷெரெப் இலியான் மற்றும் முகமது ஆசிப் என்பவரால் -2021 ல் (School Students’ Perception and Challenges towards Online Classes during COVID-19 Pandemic in India: An
Econometric Analysis)
ஆஷா நாயர் கணேசர் என்பவரால்- 2020ல் (இணையவழி வகுப்புகள் மற்றும் செயலில் பங்கேற்பை மேம்படுத்துவதில் மாணவர்களின் கருத்து பற்றிய ஆய்வு).
பள்ளி மாணவர்களின் இணையவழிக் கல்வி பற்றி கருத்து மற்றும் சவால்கள் கேள்வித்தாள்கள் ஆய்விற்கு சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது . ஆராய்ச்சியாளரின் மாணவர்களுக்கு ஏற்ப ஆராய்ச்சி கருவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் உள்ளவற்றை தேவையான இடங்களில் தமிழில்
மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்த கருவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இணையவழிக் கல்வி குறித்த மாணவர்களின் கருத்து மற்றும் சவால்களை சேகரிக்க ஐந்து-புள்ளி லைக்கர்ட் அளவுகோல் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேர்மறை வினாக்களுக்கு 5- முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்,4-ஒப்புக்கொள்கிறேன், 3-நடுநிலை,2- முரண்படுகிறேன்,1- முழுமையாக முரண்படுகிறேன் என்று மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. எதிர்மறை வினாக்களுக்கு எதிர் மாறான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆய்வின் வகை சுற்று ஆய்வு முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் இணைய வழி கல்வி பற்றிய கருத்துக்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மதிப்பிடுவதற்கான அளவை இந்த கருவி வழங்குகிறது.
புள்ளியல் பகுப்பாய்வு
தற்போதைய ஆய்வில் பின்வரும் புள்ளியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
- விளக்க பகுப்பாய்வு (சராசரி,நிலையான விலகல்)
- வேறுபட்ட பகுப்பாய்வு (t- மதிப்பு, f- விகிதம் )
போன்றவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து கருதுகோள்கள் சோதித்து அறியப்பட்டன.
ஆய்வின் வரம்பு
- மாதிரிகள் சென்னை மற்றும் மதுரை கிராமப்புறங்களில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் மட்டுமே மாதிரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- கற்பித்தல் மொழி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணாக்கர்கள்.
கருதுகோளைச் சோதித்து அறிதல்
கருதுகோள் - 1
இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பாலின அடிப்படையிலான அட்டவணை
|
மாறிகள் |
துணைமாறிகள் |
எண்ணிக்கை |
சராசரி |
திட்டவிலக்கம் |
t- ன் மதிப்பு |
முடிவு |
இணையவழிக் கல்வி கற்பது குறித்த கருத்து |
|
மாணவர்கள் |
134 |
89.22 |
11.047 |
.158
|
கு. வே. இ |
|
பாலினம் |
மாணவிகள் |
170 |
89.02 |
10.841 |
||
இணைய வழி கல்வி கற்பது குறித்த சவால்கள் |
பாலினம்
|
மாணவர்கள் |
134 |
35.07 |
6.811 |
.374 |
கு. வே. இ |
|
|
மாணவிகள் |
170 |
34.78 |
7.015 |
கு. வே. இ - குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை
மேலே உள்ள அட்டவணையில் இருந்து கணக்கிடப்பட்ட , "t" மதிப்புகள் முறையே கருத்து- .158, சவால்கள் - .374 இவ்விரு "t" மதிப்புகளும் 0.05 1.96 என்ற அட்டவணை மதிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது.இதனால் இணையவழியில் கல்வி கற்பது பற்றி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பாலின அடிப்படையில் அவர்களின் கருத்து மற்றும் சவால்கள் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று அறியப்படுகிறது.
கருதுகோள் - 2
இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பயிற்று மொழி அடிப்படையிலான அட்டவணை
|
மாறிகள் |
துணை மாறிகள் |
மாணவர்களின் எண்ணிக்கை |
சராசரி |
திட்ட விலக்கம் |
t-மதிப்பு |
முடிவு |
இணையவழிக் கல்வி கற்பது குறித்த கருத்து |
பயிற்று மொழி |
தமிழ் |
150 |
90.07 |
10.578 |
1.510 |
வே. இ |
|
|
ஆங்கிலம் |
154 |
88.18 |
11.189 |
||
இணையவழிக் கல்வி கற்பதுகுறித்தசவால்கள் |
பயிற்று மொழி |
தமிழ் |
150 |
34.32 |
6.650 |
1.467 |
வே. இ |
|
|
ஆங்கிலம் |
154 |
35.48 |
7.141 |
||
|
|
|
|
|
|
|
|
கு. வே. இ - குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை
மேலே உள்ள அட்டவணையில் இருந்து கணக்கிடப்பட்ட , "t" மதிப்புகள் முறையே கருத்து-1.510, சவால்கள் - 1.467 இவ்விரு "t" மதிப்புகளும் 0.05 மட்டத்தில் 1.96 என்ற அட்டவணை மதிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது.இதனால் இணையவழியில் கல்வி கற்பது பற்றி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பயிற்று மொழி( தமிழ், ஆங்கிலம்) அடிப்படையில் அவர்களின் கருத்து மற்றும் சவால்கள் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று அறியப்படுகிறது.
கருதுகோள் - 3
இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பள்ளியின் இருப்பிடம் அடிப்படையிலான அட்டவணை
|
மாறிகள் |
துணை மாறிகள் |
எண்ணிக்கை |
சராசரி |
திட்ட விலக்கம் |
t-மதிப்பு |
முடிவு |
இணையவழிக் கல்வி கற்பதுகுறித்த கருத்து |
இருப்பிடம் |
கிராமப்புறம் |
108 |
90.28 |
11.028 |
1.377 |
வே. இ |
|
|
நகர்ப்புறம் |
196 |
88.47 |
10.827 |
||
இணையவழிக் கல்வி கற்பது குறித்த சவால்கள் |
இருப்பிடம் |
கிராமப்புறம் |
108 |
35.86 |
7.346 |
1.179 |
வே. இ |
|
|
நகர்ப்புறம் |
196 |
34.55 |
6.660 |
||
|
|
|
|
|
|
|
|
கு. வே. இ - குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை
மேலே உள்ள அட்டவணையில் இருந்து கணக்கிடப்பட்ட , "t" மதிப்புகள் முறையே கருத்து-1.377, சவால்கள் - 1.179 இவ்விரு "t" மதிப்புகளும் 0.05 மட்டத்தில் 1.96 என்ற அட்டவணை மதிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது.இதனால் இணையவழியில் கல்வி கற்பது பற்றி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பள்ளியின் இருப்பிடம் ( நகர்ப்புறம், கிராமப்புறம் ) அடிப்படையில் அவர்களின் கருத்து மற்றும் சவால்கள் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று அறியப்படுகிறது.
கருதுகோள் - 4(அ )
இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பள்ளியின் வகை அடிப்படையிலான அட்டவணை
|
பள்ளியின் வகை |
சராசரி |
திட்டவிலக்கம் |
F- மதிப்பு |
முடிவு |
இணையவழிக் கல்வி கற்பது குறித்த கருத்து |
அரசு பள்ளி |
89.14 |
10.814 |
.754 |
கு.வே. இ |
அரசு உதவி பெறும் பள்ளி |
88.39 |
11.709 |
|||
தனியார் பள்ளி |
90.27 |
9.628 |
கு. வே. இ - குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை
மேலே உள்ள அட்டவணையில் இருந்து "F"ன் கணக்கிடப்பட்ட மதிப்பான முறையே கருத்து- .754, மதிப்புகள் பெறப்பட்டது. இவை 0.05 மட்டத்தில் 3.03 என்ற அட்டவணை மதிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது, எனவே இதனால் இணையவழியில் கல்வி கற்பது பற்றி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பள்ளியின் இருப்பிடம் அடிப்படையில் அவர்களின் கருத்து பொரறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று அறியப்படுகிறது.
கருதுகோள் - 4 (ஆ)
இணையவழிக் கல்வி கற்பது குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பள்ளியின் வகை அடிப்படையிலான அட்டவணை
|
பள்ளியின் வகை |
சராசரி |
திட்டவிலக்கம் |
F- மதிப்பு |
முடிவு மற்றும் வேறுபாடு காணப்படும் குழுக்கள் |
இணையவழிக் கல்வி கற்பது குறித்து சவால்கள் |
அரசு பள்ளி |
33.59 |
5.044 |
6.229* |
வே. உ
குழுக்கள் : 1&3, 2&3 |
அரசு உதவி பெறும் பள்ளி |
34.43 |
8.038 |
|||
தனியார் பள்ளி |
37.10 |
6.198 |
வே. உ - வேறுபாடு உள்ளது.
மேலே உள்ள அட்டவணையில் இருந்து "F"ன் கணக்கிடப்பட்ட மதிப்பான 6.229 முறையே 0.01 நிலை அட்டவணை மதிப்பு 4.68 யைக் காட்டிலும் இதை அதிகமாக காணப்படுவதால் அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே இணையவழிக் கல்வி கற்பது பற்றிய சவால்களில் வேறுபாடுகள் உள்ளது என்று அறியப்படுகிறது. மேலும் எந்தந்த குழுக்களுக்கிடையே வேறுபாடு உள்ளது என்று கண்டறியப்பட்டது. மாணவர்களின் பள்ளியின் வகை சராசரியை கணக்கிடும் பொழுது இணையவழி கல்வியியல் கற்பது பற்றிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் வேறுபாடுகள் காணப்படுகிறது. மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக்கும் வேறுபாடுகள் காணப்படுகிறது. இவற்றில் தனியார் பள்ளிகளில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே இணையவழிக் கல்வி கற்பது குறித்து சவால்களை அதிகமாக உணர்கின்றனர்.
ஆய்வின் முடிவுகள்
ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களிடயே பாலின அடிப்படையில் இணையவழிக் கல்வி கற்பது குறித்து கருத்து மற்றும் சவால்களை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.
ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே பயிற்று மொழி அடிப்படையில் இணைய வழி கல்வி கற்பது குறித்து கருத்து மற்றும் சவால்களை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.
ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே அவர்களின் பள்ளிகள் அமைந்திருக்கும் இருப்பிடம் அடிப்படையில் இணைய வழி கல்வி கற்பது குறித்து கருத்து மற்றும் சவால்களை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை
ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களிடையே அவர்களின் பள்ளியின் வகை அடிப்படையில் இணையவழிக் கல்வி கற்பது குறித்து கருத்து பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. சவால்களை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணையவழிக் கல்வி கற்பது பற்றிய சவால்களில் அதிகமாக உணர்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இணைய வழி கல்வி கற்பது பற்றிய சவால்களில் குறைவாக உணர்கிறார்கள்.
கலந்துரையாடல்
தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் சவால்கள். தனியார் பள்ளிகளுக்கு அதிகமான கற்று வசதிகள் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு முன்நிலையில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகிறது. மேம்பட்ட கருவி நுட்பங்களை பயன்படுத்தி கற்பித்தல் நடைபெறுகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கற்பது குறித்து சிரமப்படுகிறார்கள். குடும்ப வருமானம், வளங்களுக்கான அணுகல், பெற்றோரின் கல்வி நிலை,பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க நேரத்தில் ஒதுக்குகிறார்கள். அதனால் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் புதிதாக இணைய வழி கல்வியை கற்றாலும் , அதிகமான சவால்களை உணர்ந்தாலும் பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவால் கற்றலில் மேம்படுகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு வழிகாட்டுதலின்படி மாணவர்கள் புதிதாக இணையவழி கல்வி முறையை பயன்படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு பாடங்களை மட்டும் எழுதி புலனம் வழியில் புகைப்படம் எடுத்து அனுப்ப கூறுகிறார்கள். மாணவர்களும் அதையே பின்பற்றுவதால் அவர்கள் தனியார் பள்ளியை விட சிறிது குறைவாகவே சிரமப்படுகிறார்கள். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கற்றலில் மேம்பாடு சிறிது குறைவாகவே காணப்படுகிறது.
பரிந்துரைகள்
இணையவழி வகுப்பு நடக்கும்போது தனித்தனியாக மாணவர்களுக்கு பேசும் வாய்ப்பினை ஆசிரியர்கள் நேரத்தை சிறிது அதிகமான அளவு கொடுத்தல் வேண்டும். பதிவுக் காட்சி வாயிலாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்படும்போது அவற்றை திரும்ப பார்த்து சந்தேகங்களை எளிய முறையில் தீர்த்து கொள்ளமுடியும். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் டேட்டா செலவு குறைந்த அளவு காணப்படும். மாணவர்களுக்கு தேவைப்படும் சில அம்சங்களை அரசு அமைத்து தருதல் வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தரவு அட்டை வசதிகளை கொடுக்கலாம். சேவைகளை பள்ளிகளில் ஏற்படுத்தலாம். இலவசமாக ஆலலை இணைப்பை ஏற்படுத்தலாம். இப்பொழுது மின்சாரம் இல்லாத வீடுகள் காணப்படுவதில்லை. அதுபோல ஆலலை இணைப்பு அரசால் சாத்தியப்படுத்தபடலாம். இவ்வாறு சாத்தியப்படுத்தபடும் பொழுது மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இணைய வழிக் கல்வியையும்,நேரடி கல்வியைப் போல் எளிதாக ஆக்கலாம். அரசு இணையவழி கல்வி மற்றும் நேரடி கல்வி இரண்டுக்கும் பள்ளியை தயாராகவும் மாணவர்களை தயார் படுத்தவும் செய்தல் வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செய்யப்படும் பொழுது மழை, புயல் எக்காரணங்களாலும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும். பிரச்சினைகள் ஏதேனும் இருப்பினும் இணைய வழிக் கல்வியும் பிரச்சினைகள் இல்லாதபோது நேரடி கல்வியும் கற்பதால் மாணவர்களின் கல்வியில் தடைகள் ஏற்படாது இருக்கும்.
புதிய இயல்பாக பயனுள்ள கற்றலை ஊக்குவிப்பதற்கான இணையவழி தளத்தில் கற்றல் சூழலை தீர்மானிப்பதில் ஆராய்ச்சியாளர் ஆய்வின் முடிவுகள் முக்கியமான உள்ளீடாக இருக்கும்.
முடிவுரை
கொரோனா வைரஸ் நாவலின் பரவலை தடுக்கும் முயற்சிகளுடன், இணைய வழி கல்வி கற்பிப்பதற்கான முதன்மை வழிமுறையாக மாறியதன் மூலம் கல்வி முறையின் வரையறைகள் மாறிவருகின்றன. கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தை பிடிக்க இணையவழி தளங்களுக்கு மாறிவருகின்றன. மாணவர்கள் இணையவழி கற்றல் எவ்வாறு சமாளிப்பது என்பதை கூறுவது மிக விரைவாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் தடைகளை கண்டறிந்து,அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மறுசீரமைக்கிறார்கள், ஆனால் மாணவர்களின் கருத்து மற்றும் சவால்கள் ஆகியவை ஆராய்ச்சியாளரால் ஆவணப்படுத்த முயற்சித்த ஒரு முக்கியமான கருத்தாகும்.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலான மாணவர்கள் கருணாவை அடுத்து இணைய வழி வகுப்புகள் மீது நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டுகிறது. கற்பவர்களுக்கு நெகிழ்வுத் தன்மையையும் வசதியையும் அளித்ததால் இணையவழி கற்றல் முழுவதுமாக வெறுக்கப்படவும் இல்லை. சாதகமாகவும் இருந்தது. இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோக்களுடன் கூடிய நன்கு கட்டமைக்கப்பட்ட உள்ளடக்கத்தை சில மாணவர்கள் விரும்பினார்கள். இருப்பினும், பெரும்பாலான மாணவர்கள், தொழில்நுட்ப கட்டுப்பாடுகள், தாமதமான கருத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை திறம்பட கையாள பயிற்றுவிப்பாளரின் இயலாமை காரணமாக பாரம்பரிய வகுப்பறையை விட இணைய வழி வகுப்புகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். எனவே ஒரு இணையவழி பாடத்திட்டத்தை கற்பவருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் பயனுள்ளதாக மாற்றும் போது இந்தக் காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் . கொரோனா வைரஸ் தொற்று நோய் தணிந்தவுடன்,ஆய்வு உதவிகளுக்கான இணையவழி தளங்களைப் பயன்படுத்தும் கல்விமுறைகள் தொடர்ந்து அதிகரிப்பதை காணலாம்.வழக்கமான வகுப்புகளுடன் இணைந்து கலப்பின முறையில் இருந்தாலும், எனவே இணையவழி பயன் முறையை உள்ளடங்கிய உயர்கல்வியை மறு வடிவமைக்கவும் இந்த ஆய்வு பயனுள்ளதாக இருக்கும்.
References:
Araujo, T., Wonneberger, A., Neijens, P., & de Vreese, C. (2017).
How much time do you spend online?
Understanding and improving the accuracy of self-reported measures of Internet use. Communica-
tion Methods and Measures, 11(3), 173–190.
Barrot, J. S. (2016). Using Facebook-based e-portfolio in ESL writing classrooms: Impact and challenges.
Language, Culture and Curriculum, 29(3), 286–301.
Bansal, S. (2017).
How India’s ed-tech sector can grow and the challenges it must overcome. VC Circle. https://www.vccircle.com/the-present-and-future-of-indias-online-education-industry.
Google Scholar
Barrot, J. S. (2018).
Facebook as a learning environment for language teaching and learning: A criti-
cal analysis of the literature from 2010 to 2017. Journal of Computer Assisted Learning, 34(6),
863–875.
Barrot, J. S. (2020).
Scientifc mapping of social media in education: A decade of exponential growth.
Journal of Educational Computing Research. https://doi.org/10.1177/0735633120972010.
Barrot, J. S. (2021).
Social media as a language learning environment: A systematic review of the litera-
ture (2008–2019). Computer Assisted Language Learning. https://doi.org/10.1080/09588221.2021.
Bergen, N., & Labonté, R. (2020).
“Everything is perfect, and we have no problems”: Detecting and
limiting social desirability bias in qualitative research. Qualitative Health Research, 30(5), 783–792.
Birks, M., & Mills, J. (2011).
Grounded theory: A practical guide. Sage.
Boelens, R., De Wever, B., & Voet, M. (2017). Four key challenges to the design of blended learning: A
systematic literature review. Educational Research Review, 22, 1–18
Buehler, M. A. (2004).
Where is the library in course management software? Journal of Library Admin-
istration, 41(1–2), 75–84.
Klingner (2003).
The relationship between learning styles of adult learners enrolled in online courses at Pace University and success and satisfaction with online learning (Doctoral dissertation
Walden University (2003)
Leo S. del Rosario ( 2021) .
Students’ online learning challenges during the pandemic
and how they cope with them: The case of the Philippines
Nguyen, (2015).
The effectiveness of online learning: Beyond no significant difference and future horizons
MERLOT Journal of Online Learning and Teaching, 11 (2) (2015), pp. 309-319
View Record in ScopusGoogle Scholar
T.Muthuprasada, S.Aiswaryab, K.S.AdityaaGirish, K.Jhaa (2020).
Students’ perception and preference for online education in India during COVID -19 pandemic
Author links open overlay
https://doi.org/10.1016/J.SSAHO.2020.100101
Trautwein et al , U. Trautwein, O. Lüdtke, C. Kastens, O. (2006)
Effort on homework in grades 5–9: Development, motivational antecedents, and the association with effort on classwork
Child Development, 77 (4) (2006), pp. 1094-1111
Smith P.J. Smith, K.L. Murphy, S.E. Mahoney (2003).
Towards identifying factors underlying readiness for online learning: An exploratory study
Distance Education, 24 (1) (2003), pp. 57-67