Volume 5, Issue 1

கம்பராமாயணத்தில் போர் அறம்

Author

முனைவர். க.மங்கையர்க்கரசி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: புற ஒழுக்கமான போர் செய்வதிலும், வெற்றி பெறுவது தான் நோக்கம் என்றாலும், அதிலும் அறம் பின்பற்றப்பட்டது. கம்பராமாயணத்தில் கதையின் நாயகன் இராமன், இலட்சுமணன், அனுமன் ஆகியோரும், எதிர்நிலைத் தலைவனான இராவணன், கும்பகர்ணனும் சில இடங்களில் போர் அறத்தை மேற்கொண்டதைக் கம்பராமாயணத்தின் மூலம் அறிய முடிகிறது. ஆயுதம் இல்லாத நிலையிலும்,, தளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போது நீ வெற்றி பெற்றால் இனி உன்னிடம் போர் புரிய மாட்டேன் என்று கொடுத்த வாக்கினை காப்பாற்றுதலும், போர் அறம் பின்பற்றப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எதிரிக்குப் பயந்து, போரில் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது. போர் செய்ய துவங்கும் முன் தூது அனுப்பும் போர் அறமும், தூதர்களையும், ஒற்றர்களையும் கொல்லக்கூடாது என்ற போர் அறமும் கடைபிடிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. எதிரிகளைச் சோர்வடையச் செய்து அவனைக் கொல்வது, எதிரியைக் கோபப்படுத்தி அதன் மூலமாக அவனை வெல்வது போன்ற போர் உத்திகளும் பின்பற்றப்பட்டதை கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது. வாலியைத் தான் மறைந்திருந்துத் தாக்கிக் கொன்றதையும், போர் அறம் துறந்ததையும், அதை இராமனே ஒப்புக்கொள்வதையும், கம்பராமாயணத்தின் வழி அறிய முடிகிறது.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர். க.மங்கையர்க்கரசி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை | கம்பராமாயணத்தில் போர் அறம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)