ஜீ.பால்ராஜ் B.A.(Hons) விரிவுரையாளர் இந்துநாகரிகத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம்,இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: இந்துசமயம் என்பது வேதங்களைப் பிரமாணங்களாக ஏற்று இந்தியாவிலே புராதன காலத்தில் இருந்தே வழங்கி வரும் ஒரு சமயமாகும். 'சனாதன தர்மம்' அதாவது 'என்றும் வாழும் அறம்' என்ற பெயரும் இந்துசமயத்திற்கு வழங்கப்படுகிறது. ஒரு மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் இந்துசமயமானது சில தனித்துவமான இந்துப்பண்பாட்டு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் வழிபாடும் ஒன்றாகும். இந்து என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூகம் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகின்ற பண்பாட்டுக் கூறுகளுள் வழிபாடு பிரதானமானது. இந்துக்களிடம் அறிவியல் அறிவு இருந்துள்ளது என்பதனை அவர்கள் வகுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாடும் உணர்த்துகிறது. கடவுளை பக்தியுடன் வழிபடுவதற்காக பல வழிபாட்டு முறைகள் இந்துசமயத்தில் காணப்படுகின்றன. அவற்றினை ஆன்மீகமாகப் பார்க்காமல் அறிவியலாகப் பார்க்கின்ற போது இந்துசமய வழிபாட்டிற்குள் விஞ்ஞானம் அடங்கியிருப்பது தெரியவருகிறது. எனவே இந்துசமய வழிபாட்டினுள் அடங்கியுள்ள அறிவியல் சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 18 | VIEWS | DOWNLOADS
ஜீ.பால்ராஜ் B.A.(Hons) விரிவுரையாளர் இந்துநாகரிகத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம்,இலங்கை | இந்துசமய வழிபாட்டில் அடங்கியுள்ள அறிவியல் சிந்தனைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |