முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன்
தமிழர்களின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டுருவாக்கம் செய்யவும் நமக்கு இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் தரவுகள், வரலாற்று நூல்கள், நாணயங்கள், செப்பேடுகள், அயல்நாட்டார் பயணக்குறிப்புகள் ஆகியவைத் துணைபுரிகின்றன. அக்குறிப்புகளின் வழி நமக்குச் சங்ககால மக்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடிகின்றது. சங்க இலக்கியங்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பினும் அவர்களின் வரலாறு தொடர்ச்சியாக எழுதப்படவில்லை. வெவ்வேறு காலக்கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் தொடர்ச்சியாக ஆண்டதாக எடுத்துக் கொள்ளவும் இயலாது. அதனால் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட மன்னர்களை வரிசைப்படுத்துவதில் சிரமமேற்படுகின்றது. நமது தமிழ் அறிஞர்கள் தமிழ் மன்னர்களின் விவரங்களைக் காலவரிசைப்படி ஒருவாறுத் தொகுத்து அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மன்னர்களின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆயினும், இக்கட்டுரை குறிப்பிட்ட அரசனைப் பற்றி குறிப்பிடாமல் அரசன் என்ற பொதுப்பொருண்மையில் ஆராயப்படுகின்றது.
திறவுச் சொற்கள்: அரசன், தமிழ் இலக்கியம், தமிழ்வரலாறு, கல்வெட்டுகள், சங்ககாலம்
PAGES: 20 | VIEWS | DOWNLOADS
முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் | இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் அரசன் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |