முனைவர்.வி.சேகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த் தலைவர், துணைமுதல்வர், பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம், இந்தியா
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அறுவர் உரையெழுதியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் உரைகளில் முந்தைய உரைமரபைப் பின்பற்றி விளக்கம் தருதல், தத்தம் தனித்தன்மைகளை வெளிப்படுத்துதல் என்னும் நிலைகளில் பல்வேறு உரைநுட்பங்களை வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். அவற்றுள் ஒன்றே வினா விடை அல்லது பாடம் எடுத்தல் என்ற நுட்பமாகும். இந்நுட்பத்தினை இவர்கள் சரியான இடங்களில் மேற்கொண்டு உரையினைக் கேட்பவர் அல்லது படிப்பவருக்கு எந்த ஐயமும் ஏற்படாமல் பாடம் நடத்தும் ஓர் ஆசிரியர்போல் திகழ்ந்துள்ளனர். ஆசிரியர், பாடம் நடத்தும்போது மாணவனுக்கு ஏற்படும் ஐயத்தினையும் மயக்கத்தினையும் போக்குவது போன்று உரையாசிரியர்களும் தத்தம் உரைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ வினாக்களை எழுப்பித் தாமே விடைகளையும் கூறியுள்ளனர். மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கவும் தமது கருத்தை வலியுறுத்தவும் இவ்வினா விடைகள் உதவுகின்றன. உரையாசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாகத் திகழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணமாக விளங்குவன இவ்வினாக்களும் அதற்கு அவர்கள் கூறியுள்ள விளக்கங்களும் ஆகும். இவ்வாறு உரை எழுதுவது உரையாசிரியர்களின் இயல்பான உரை நுட்பமாக அமைந்துள்ளது. இது உரை நுட்பத்தின் உயிர்நாடியாகும். இந்நுட்பம் உரையின் செயல், பயன், நோக்கம் மூன்றையும் ஐயமறத் தெளிவிப்பதாகும். இந்நுட்பத்தினை தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
PAGES: 15 | VIEWS | DOWNLOADS
முனைவர்.வி.சேகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த் தலைவர், துணைமுதல்வர், பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம், இந்தியா | தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர்கள் சிறந்த ஆசிரியர்கள் (ஆராய்ச்சியாளர்கள்) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |