முனைவர் வெ. நளினி, உதவிப் பேராசிரியர் எஸ் ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பியல் நிறுவனம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை இராமபுரம் சென்னை
இலக்கியம் என்பதே காலநிலை மற்றும் வாழ்வியல் முகிழ்ப்பாக ஆக்கம் கொள்ளும் தன்மைத்து ஆதலால் சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையையும் மானுட வாழ்வியல் நிகழ்தகவுகளையும் உள்ளீடாகக் கொண்டு தோன்றியவை எனலாம். வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுப் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடந்த பாடல்கள் அகம், புறம் எனத் தேர்ந்த திணைக் கோட்பாட்டு அடிப்படையில் தொகுத்து நிரல்படுத்தித் தர நிர்ணயம் செய்யப்பட்டிருத்தலைக் காணமுடிகிறது. நிலவியல் மற்றும் சூழலியல் சார்ந்து பல்வேறு இனக்குழுக்களாகக் கலந்து வாழ்ந்த பழந்தமிழ்ச் சமூகத்தின் இயற்கை சார் இயங்கியல் தரவுகள் இவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தரவுகளின் வாயிலாக தனிமனிதச் சமூக உறவுகளையும் பொருளியல்சார் உற்பத்தி உறவுகளையும் இனம் காணமுடிகிறது. அகம் மற்றும் புற வாழ்வியல் இயங்குதளங்களில் பல்வேறு உறவு நிலைப் பின்னல்களைக் கொண்டிலங்கிய சமூகக் கட்டமைப்பையும் வாழ்வியல் நடவடிக்கைகளையும் வரையறை செய்ய முடிகிறது. எனவே சங்கச் செய்யுளாக்கங்களில் பதிவுசெய்யுப்பட்டுள்ள மானுட உறவுகளையும் அதன் ஊடாக வெளிப்பட்ட சமூகக் கட்டமைப்பையும் அடையாளம் காணும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
திறவுச் சொற்கள்: உறவு, சொற்பொருண்மை, தாய்வழிச் சமூகம், சங்ககால உறவு முறைச் சொற்கள், தற்கால உறவு முறைச் சொற்கள், உறவுகளும் வாழ்வியலும்
PAGES: 9 | VIEWS | DOWNLOADS
முனைவர் வெ. நளினி, உதவிப் பேராசிரியர் எஸ் ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பியல் நிறுவனம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை இராமபுரம் சென்னை | சங்க இலக்கியங்களில் சமூக உறவுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |